பக்கம்:திருக்குறள் உரை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 127. அவர்வயினி விதும்பல் 1261, வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். 1262. இலங்கிழாய் இன்று மறப்பினெண் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. 1263.உரண்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொடேறுமென் நெஞ்சு, 1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு. 1266. வருகமன் கொண்கன் ஒருநாட்பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. 1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். 1268. வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. 1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லுசேண்சென்றார் வருநாள் வைத்தேங்கு பவர்க்கு. 1270. பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 326