பக்கம்:திருக்குறள் உரை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 129. புணர்ச்சி விதும்பல் 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். 1283. பேணாது பெட்டவே செய்யினும் கொண்கனைக் காணாதமையல கண். 1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென்னெஞ்சு. 1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண் பழிகாணேன் கண்ட இடத்து. 1286. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல்லவை. 1287. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலத்து. 1288. இனித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. 1289. மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படுவார். 1290 கண்ணின் துளித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தாண்விதுப் புற்று. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 328