பக்கம்:திருக்குறள் உரை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 132. புலவி நுணுக்கம் 1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பார் நண்ணேன் பரத்தநின் மார்பு. 1312. ஊடி இருந்தேமாத்தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து, 1313. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. 1314. யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. 1315. இம்மைப் பிறப்பில் பிரியலம் எள்றேனாக் கண்நிறை நீர்க்கொண்டனள். 1316. உள்ளினேன் எள்றேன்மற் றென்மறந்தீர் என்றென் புல்லாள் புலத்தக் கணள். 1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழுத்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. 1318.தும்முச்செறுப்ப அழுதாள்நுமருள்ளல் எம்மை மறந்தீரோ என்று. 1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர இந்நீர் ஆகுதிர் என்று 1320. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. 331 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை