பக்கம்:திருக்குறள் உரை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 133. ஊடலுவகை. 1321 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு. 1322. ஊடலின் தோன்றும் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும். 1323. புலத்தலிற் புத்தேள்நாடுண்டோ நிலத்தொடு நீரியைத் தன்னார் அகத்து. 1324. புல்லி விடாஅப் புலலியுள் தோன்றுமெள் உள்ளம் உடைக்கும் உடை. 1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன்றுடைத்து. 1326, ചങ്ങി உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1327. ஊடலின் தோற்றவர் வென்றார்.அதுமன்னும் கூடலிற் காணப் படும். 1328, ஊடிப்பெறுகுவம் கொல்லோ நுதல் வெயப்பக் கூடலில் தோன்றிய உப்பு. 1329.ஊடுகமன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. 1330. ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். (திருக்குறள் இன்பத்துப்பால் முற்றுப்பெற்றது) 米米米米米 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 332