பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

திருக்குறள் கட்டுரைகள்


கேட்பது உள்ளத்தையே உருக்கும் தன்மை வாய்ந்ததாகும்.

கனவு என்பது பெரும்பாலும் நடவாததையும்,நடக்க முடியாததையுந் தழுவியிருக்கும். நனவு என்பது பெரும்பாலும் நடந்ததாகவும் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். வள்ளுவர் காண்பதில் எதுவுங் கனவு இல்லை; யாவும் நனவே எனத்துணிந்து கூறப் பலர் முன் வருவார்கள். ஆனால் வள்ளுவர் கண்ட கனவை அவர்கள் அறிவார்களா?

“நாற்புறமும் கடல் நடுவே ஒரு தீவு அதில் ஆயிரக்கனக்கான மக்களின் கூட்டம் அவருள் ஆண்மையுடையோர் சிலர். அவருள்ளும் சான்றாண்மையுடையோர் இரண்டொருவர். அவர்களும் தங்கள் பண்பின் மாறு நீட்டு, சால்பிற் குறைந்து, சான்றாண்மையில் சிறிது குன்றிப்போய் விட்டவர்கள். அவ்வளவுதான்; அங்கு நடந்தது என்ன தெரியுமா? உடனே அத்தீவு அங்குள்ள மக்களைத் தாங்க முடியாமல் தடதடத்துத் தவித்தது மறுவிநாடியே அந்நிலம் பிளந்து கடலிலேயே ஆழ்ந்து போய்விட்டது” என்பதே அவர் கண்ட கனவு. அவரது கனவை அவரது வாயாலேயே கேளுங்கள். “சான்றவர் முன்றாண்மை குன்றின் இரு நிலத்தான் தாங்காது முன்னோ பொறை” என்பது சான்றாண்மை அதிகாரத்தில் இறுதியாகக் கூறிய குறள். எப்படி வள்ளுவர் கண்ட கனவு?

ஊழிக்காலம் வந்து, கடலும் மலையும் தம் நிலை பெயர்ந்தாலும், நற்குணம் படைத்த சான்றோர்கள் தங்கள் நிலை தவறுவதில்லை. அப்படித் தவறினால், உலகம் பொறுப்பதுமில்லை என்று வள்ளுவர் பெருமான் சான்றாண்மையை அதன் பண்போடு கூறி முடிக்குத் தன்மை சான்றாண்மைக்கே ஒரு தனிச்சிறப்பை அளிக்கின்றது.