பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

திருக்குறள் கட்டுரைகள்


செல்வம் நிலையாது! அஃது என்றும் உன்னிடம் நிலைத்து நிற்கும் என்றெண்ணி ஏமாற்றம் அடையாதே! கூத்து நடைபெறும் அவையில் கூடிக்கலையும் குழுவினரைப் போல என்றோ ஒருநாள் அஃது உன்னைவிட்டு ஒழிந்து போய்விடும். ஆதலின் அறஞ்செய்! அது நல்லது! என்பது இக்குறளின் திரண்ட கருத்து.

சிலப்பதிகாரத்தின் காலத்திற்கு முன்னுள்ள வள்ளுவர் காலத்திலும் நாடகக் கலை இருந்திருக்கிறது. நாடகங்கள் பல வள்ளுவர் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. நாடகம் பார்ப்பதில் வள்ளுவருக்கும் விருப்பம் உண்டு. நாடகத்தைக்கண்டு களித்திருக்கிறார். அதுவும் எல்லோருக்கும் முன்னே சென்று அமர்ந்து பார்த்திருக்கின்றார். முன்புறத்தில் மட்டுமல்ல; பின்புறத்திலும் திரும்பிப்பார்த்து கூட்டத்தின் பெருக்கைக் கணக்கிட்டு மகிழ்ந்திருக்கிறார். நாடகம் முடிந்தபிறகு நெருக்கடியில் அகப்படாமல் இருந்து, வெற்றிடத்தைக்கண்டு கடைசியாகவே வெளி வந்திருக்கிறார். நாடக அவையை, நாடகக்கலையை, நாடகக் கலைஞர்களைச் செல்வமாகக் கருதியிருக்கிறார். வெறுஞ் செல்வமாக அல்ல; பெருஞ் செல்வமாகவே கருதியிருக்கிறார் என்ற இதுவும், இது போன்ற பிறவும், இக்குறளால் அறியக் கூடியவை.

வாழட்டும் குறள்நெறி!