பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பீலிபெய் சாகாடு

திருவள்ளுவர் ஒருநாள் சாலை வழியே நடந்து கொண்டிருந்தார் ஒரு வண்டிக்காரன் மயில் தோகைகளைச் சுமைகமையாகக் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். வள்ளுவர் கண்களை மயில் தோகையின் கண்கள் கவர்ந்தன. அருகில் சென்று தொட்டுப் பார்வையிட்டார். அது பட்டினும் பளபளப்பாய், பஞ்சினும் மென்மையதாய், எடையிலும் மிக எளிதாய்த் தோன்றியது என்றாலும் அதைக்கொண்டு இரும்புத் துணையும் முறிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டது.

என்னே அவரது துணிவு.! உங்களால் அந்த முடிவுக்கு வர முடியுமா? எண்ணிப் பாருங்கள்.

வள்ளுவர் என்ன செய்தார் தெரியுமா? உடனே வண்டிக்காரனைக் கூப்பிட்டார். “தம்பி, மயில் தோகையாயிருந்தாலும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றாதே; ஏற்றினால் அச்சு முறிந்துவிடும்” என வெகு அருமையாகக் கூறினார் அக்குறள்தான் இது:

பீலியெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பீலி என்பது மயில் தோகையையும், சகடு என்பது வண்டியையும் குறிக்கும்.

எப்படி மயில் தோகையைக் கொண்டு வள்ளுவர் இரும்பு அச்சை முறித்துக் காட்டியது நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி.என்னே அவரது அறிவுத் திறன்!

இக்குறளின் பொருள் மயில் தோகையையும் வண்டியையும் பற்றியதாக மட்டுமில்லை. வாழ்க்கையின் பல

திரு-4