பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்குறள் கதைகள் போஸ்ட் மாஸ்டரைப் பார்த்துச் சீதாராமய்யா கேலி செய்வதுபோல் இருந்தது. அட பாவமே 1 பேரன் மன்னியார்டர் அனுப்பியிருக் கிருன் என்பதை அறிந்தால் சீதாராமய்யா எவ்வளவு சந்தோஷப் படுவார் ? மணியார்டர் வரும் வரும் என்று எத்தன நம்பிக்கையோடு எத்தனை காலமாகக் காத்திருந் தார். சீதாராமய்யாவின் வாழ்க்கையில் கிடைத்த ஒரே சந்தோஷத்தை-பேரன் அனுப்பிய மணியார்டரில் கை யெழுத்துப் போட்டு வாங்கும். சந்தர்ப்பத்தை-ஒரே வார்த் தையில் இல்லாமல் செய்துவிட்டேனே ? நான் மணியார் டரைக் கொடுத்திருந்தால் அவர் அநுமார்கோயில் மண்ட பத்துக்குப் போயிருக்க மாட்டாரே !. அவரைப் பாம்பும் கடித் திருக்காதே பொறுப்பற்றி என் பதில் ஒரு நல்ல ஆத்மாவின் முடிவுக்குக் காரணமாகி விட்டதே ! அசட்டை யாக நான் செய்துவிட்ட குற்றம் எவ்வளவு பெரிய விபரீத மாக முடிந்துவிட்டது. என்று துடிதுடித்துப் போளுர் வராகாச்சாரி. 'என் ஆயுள் காலத்தில் பாம்புக் கடிக்கு நான் மந்திரம் போட்டுப் பிழைக்காத கேஸ் இது ஒன்றுதான். என் தபாலாபீசுக்கு வந்த மணியார்டர் டெலிவரி ஆகாமல் கிடப்பதும் இதுதான் முதல் தடவை.வராகாச்சாரியின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது. தாம் செய்த பெரும் பிழைக்குப் பிராயச் 'சித்தமாகச் சீதாராமய்யாவின் அந்திமக் கிரியைகளைத் தாமே நடத்தி முடித்தார். - கவிழ்ந்த முகத்துடன், கனத்த இதயத்துடன் மேஜை முன்பு வந்து உட்கார்ந்தார் வராகாச்சாரி. மணியார்டர் பாரம் அவரைப் பார்த்துச் சிரித்தது. கண்ணிரைத் துடைந்தபடியே வராகாச்சாரி அந்த மணியார்டரைக் கையிலே எடுத்துப் பார்த்தார். அதில் சீதாராமய்யாவின் முகம் தெரிந்தது. - 'எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா ? ...सि