பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கூ ஊஊ!’ என்று நீட்டி முழக்கிய ஆலைச் சங்கின் ஒலி அடங்கியதும் தொழிலாளர்கள் அனைவரும் அணை திறந்த வெள்ளம்போல் அலை அலையாக வெளியே வந்துகொண் டிருந்தார்கள். - - அப்போது மணி பன்னிரண்டரை. சாப்பாட்டுக்கான இடைநேரம். மணி ஒன்றரை ஆண்தும் இடைவேளை முடிந்து விட்டதை அறிவிக்க மீண்டும் சங்கு ஊதப்படும். இந்த ஒரு மணி நேர இடைவேளை தான் தொழிலாளர்களின் இன்ப நேரம். - அதுவரை வெறிச்சோடிக் கிடக்கும் ஆலையின் வெளிப் புறச் சூழ்நிலையில் சங்கு பிடித்ததும் ஒருவிதப் பரபரப்பும் கலகலப்பும் தோன்றிவிடும். சாப்பாட்டுக் கூடைகளும், அவற்றிலுள்ள பளபளக்கும் பித்தளை டிபன் காரியர்களும் ஆங்காங்கே பளிச்சிடும்.