பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
viii


கணியூர் மதுநெஞ்சன் மகிழ்வுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட ஓர் இரண்டு அடுக்கு மளிகை!

மூன்று வாயில்களிலும் உள்ளே புகுந்து 133 பேசும் பதுமைகளுடன் பேசி வரலாம்.

இந்த மாளிகையின் அழகினைப் பேசும் பதுமைகளுடன் பேசுதற்காகப் பரிமேலழகர் என்ற ஒரு (வழிகாட்டியைப்) பல பேர் துணைக்கு அழைத்துவந்தார்கள்.

அவர் அற்புதமாக வருணித்தார் விளக்கங்கள் தந்தார்.

அவருக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான வழிகாட்டிகள்!

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எளிய விளக்கமான மு.வ. என்ற வழிகாட்டி!

அவருக்கு அடுத்த வீட்டுக்காரரான ரா.சீ. என்ற புதிய வழிகாட்டி!

அறத்தின் வழியே பொருள் சேர்த்து. இன்பத்தையும் காணுதற்கு இந்த மாளிகையின் பதுமைகள் விளக்கம் தருகின்றன.

இப் பதுமைகளுடன் நாம் பேசி விளங்கிக்கொள்வதைக் காட்டிலும் வாழ்வியல் வழிகாட்டியான ரா.சீ. அவர்களுடன் சென்று விளங்கிக்கொள்வதையே ‘திருக்குறள் செய்திகள்’ என்னும் நூல் சொல்லுகிறது.