நேர்வழியில் உழைத்துக்குடியை உயர்த்துபவனை உலகம் உயர்த்திப் பாராட்டும்.
நல்ல ஆளுமை என்பது ஒருவனுக்குத் தான் பிறந்த குடியை உயர்த்தும் தன்மையை ஒட்டியது ஆகும்.
போர்க்களத்தில் வீரர்க்கே பெருமை; வீட்டுச் சூழலில் எதனையும் தன் மேலே போட்டுக்கொண்டு தயங்காமல் உழைப்பவனையே எதிர்பார்த்து நிற்பர்.
“எப்பொழுது செய்வது?” என்று காலம் கருதிக் காத்துக் கொண்டிருக்க மாட்டான். பருவம் அவனுக்குத் தேவை இல்லை; “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சோம்பிக் கிடப்பவர்க்கு எந்த நன்மையும் கிடைக்காது.
“நானா வேலை செய்வது? எனக்கு இஃது அவமானம்” என்று நடப்பது தக்கது ஆகாது; குடும்பத்துக்குத் தொடர்ந்து உழைப்பவன் துயரங்களைத் தடுக்கும் கவசம் போன்றவன் ஆவான். அடுத்துத் தாங்கும் ஆள் இல்லாத குடும்பம் துன்பம் வந்தால் சரிந்துவிடும்.
எப்படிச் சுற்றி வந்தாலும் உழவுத் தொழிலைத்தான் நம்பி உலகம் வாழ வேண்டி இருக்கிறது. உழவர்கள் வண்டிக்கு இருகபோன்றவர்கள்; அவர்கள்தாம் மற்ற எல்லோரையும் தாங்குகிறார்கள்.
நிலத்தை மூலதனமாகக் கொண்டு உழுபவர் யாரையும் தொழுது வாழ வேண்டியது இல்லை. இவர்கள் பிழைப்பு மற்றவர்களை எதிர்பார்ப்பது அன்று.