பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
169


அச்சத்தின் காரணமாக ஆசாரம் உடையவர்கள்போல் நடந்துகொள்வார்கள்; நன்மைகள் உண்டாகுமானால் அந்த ஆசாரங்களை உடனே கைவிட்டுவிடுவர்.

தமக்குத் தெரிந்த இரகசியச் செய்களை எல்லாம் பலரும் அறிய வெளியிடுவர்; பறை அடிப்பதுபோல அங்கங்கே சொல்லித் திரிவர். இஃது அவர்கள் நடவடிக்கை.

மனம் விரும்பி எச்சில கையால் கூடக் காக்கையை ஒட்டமாட்டார்கள் அதன் சோற்றுப் பருக்கையை அது தின்று விடும் என்பதால். அடி உதை என்றால் உடனே படிந்து விடுவார்கள்; சான்றோர்கள் சொன்னால் கேட்பார்கள்; பயன்படுவர்; கயவர் “கொல்லுகிறேன்” என்றால்தான் அஞ்சி அடங்கிப் பயன்படுவர். உதைத்தால்தான் ஒழுங்குக்கு வருவார்கள். கரும்பைக் கசக்கிப் பிழிந்தால் தான் சாறு வெளிப்படும். அடித்து உதைத்தால்தான் இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள்; திருந்துவார்கள். நல்ல முறையில் சொன்னால் இவர்கள் வழிக்கு வர மாட்டார்கள்.

பிறர் நன்றாக இருந்தால் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. வெள்ளையாக உடுத்திவருவதைப் பார்த்தால் அவர்கள் உள்ளம் வெந்து எரியும். மற்றவர்கள் மேன்மை அடைந்தால் இவர்கள் பொறுக்க மாட்டார்கள். அவர்களைக் கெடுப்பது எப்படி என்று சூழ்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள்.

கயவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர், ஒரு நன்மை கிடைக்கிறது என்றால் உடனே தம்மை விற்றுவிடுவர்; தன்மானம் இழந்துவிடுவர்; எந்தத் தீமையும் செய்ய முன் வருவர். கொள்கை அற்றவர்கள் இவர்கள்.