பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
183


“சொந்தக்காரர் இல்லாத புதிய ஊரில் குடி இருப்பது வெறுமையாகும்; தலைவன் இல்லாமல் இங்கே வாழ்வது சிறுமையாகும்.”

“நெருப்புத் தொட்டால்தான் சுடுகிறது; காமம் விரும்பினாலே சுடுகிறது.”

“என் நிலைமைதான் இப்படியோ என்னைப் போல் பிறரும் இவ்வாறு வேதனைப்படுகின்றனரோ? பிரிவு என்னைத்தான் வாட்டுகிறதா? பெண்களையே இவ்வாறு இது வருத்துகிறதா?”

117. படர் மெலிந்திரங்கல்
(துன்பத்தால் தலைவி வருந்திக் கூறுதல்)


“என் துன்பத்தை மறைக்க முயல்கிறேன்; என் கண்ணீர் அதனை உரைப்பதற்கு முந்திக்கொள்கிறது.”

“இதனை மறைக்கவும் முடியவில்லை; அவருக்கு எடுத்து உரைக்கவும் நாண வேண்டி இருக்கிறது.”

“காமம் ஒரு பக்கம்; நாணம் மறுபக்கம்; இருபக்கம் தனித்தனியே இழுக்க நடுவில் யான் காவடித் தண்டுபோல் சுமக்க முடியாமல் நசுங்கிப் போகிறேன்.”

“காமம் ஒரு கடல் என்றால் அதனைக் கடக்கும் தெப்பம் எதுவும் கிடைக்கவில்லை.”

“காதலர் என் நண்பர்; நட்பாக இருக்கும்போது துயர் செய்கிறார் என்றால் பகையாக மாறினால் அவர் தரும் வேதனைக்கு அளவு உண்டோ?”