பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22


நேற்று அடுக்கிய செல்வத்தோடு வாழ்ந்தவன் இன்று ஒடுக்கிய வறுமையில் உழன்று அடங்கிவிடுகிறான்; செல்வம் அதன் பெயருக்கு ஏற்ப அது செல்லும் இயல்பினது; இடத்திற்கு இடம் தாவும்: அஃது ஒரு நிலை கொள்ளாது: பொருள் இன்று வரும்; நாளை போகும்; அவன் நாணயம் ஒன்றைத்தான் மற்றவர்கள் நாநயம் விமரிசிக்கும்; பாராட்டும்.

ஒருவன் எப்படி வாழ்ந்தான்? எப்படிப் பொருளைச் சேர்த்தான்? என்பது அவன் வாழும்போது விளங்காது. தன்னை விற்று அவன் உயர்ந்தானா? அசைந்து கொடுக்காமல் கொள்கைப் பிடிப்போடு கொடி தாங்கினானா? என்பது அவன் மறைந்தபின்தான் பேசுவார்கள். ஒழுங்காக வாழ்ந்தவர்களின் மனச்சான்று தீர்ப்பாக அவர்களுக்கு நற்சான்றைத் தரும்; தவறான வழியில் பொருளை ஈட்டி அவர்கள் சலவைக்கல் பதித்து வீடுகட்டி இருந்தாலும் அவர்களை வெளுத்துக் கட்டாமல் இருக்கமாட்டார்கள்.

மனச்சான்று ஒருவனுக்கு ஆசான். குருவின் ஆணைக்குக் கீழ்ப்படிவதுதான் நன்மாணாக்கனின் கடமை; குருவை மீறி எந்தச் சீடனும் நடந்துகொண்டால் அவன் சீர் பெற முடியாது. நல்லது செய்து அதனால் அவன் கெட்டு விட்டாலும் அவனைப் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். வறுமை கண்டும் அவர்கள் அவன் பெருமையைப் பேசுவர்; நன்மையில் புடம்போட்டு எடுத்த பொற்கலம் அவன் வாழ்வு எனப் போற்றுவர்; சமன்செய்து சீர்தூக்கும் தராசு போல ஒரு பக்கம் சாயாது வாழ்வது ஒருவனுக்குப் பெருமை தரும்; சால்பு உடையவன் என்று எடைபோட்டுக் கூறுவர். அவன் மதிப்பு உயரும்.

நடுநிலைமை கெட்டுப் பொருள் நாடும் நிலைமையைத் தான் ஊழல் என்று கூறுவர். ஊழல் பெருகினால் நேர்மை