பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv


நிலம்’. ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப் பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது.

1991முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.

இத்தகு எழுத்துப் பின்னணியில் அதன் உச்சகட்டமாய்த் ‘திருக்குறள் செய்திகள்’ எனும் இவ் வரைநடை நூல் வெளிவருகிறது; இம் முயற்சியே கவர்ச்சியாய் இருக்கிறது. “இதற்கு வரவேற்பு உண்டு” என்று வாழ்த்தினேன; பாராட்டினேன்.

நூல் வந்ததும் பேராவலொடு புரட்டிப் பார்த்தேன்; ஒரு காவியத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அறநெறி கூறும் அறிவுநூலை ஒரு காவியமாயத் தந்திருப்பதனைக் காண்கிறேன்; இதற்கு அவரது தனித்தமிழ் நடையே காரணம் என்பதனை அறிகிறேன்; ‘உரைநடைக்கும் யாப்பும் அணி நலமும் அமைக்க முடியும்’ என்பதனை அவர் எழுத்தில் காணமுடிகிறது.

திருக்குறள் பாக்களை அச்சிடாமல் ஆற்றொழுக்காய்த் தொடர்ந்து செய்திகளைமட்டும் தந்திருப்பது புதுமுயற்சியாகும்; டாக்டர் மு.வ. தெளிவுரை தந்தார்; இவர் அதனைத் தொடர்ந்து செய்திகளைமட்டும் தந்திருக்கிறார். இந் நூல் இன்றைய தேவை; இதனால், இஃது ஓர் அரிய சேவையாயும் அமைந்திருக்கிறது; மீண்டும் என் பாராட்டுகள்: வாழ்த்துகள்: வாழ்க பல்லாண்டு!

இராம. சுப்பிரமணியன்

சென்னை - 106
1–8–1994