பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
65


2. பொருட்பால்


39. இறைமாட்சி
(அரசனது நற்குண நற்செயல்கள்)

படை, குடிமக்கள், விளைபொருள்கள், அமைச்சு, நட்பு, அரண் இவ் வாறும் அரசனது நல்லாட்சிக்கு அடிப்படைகள் ஆகும். இவற்றை அரசு அங்கம் என்றும் கூறுவர்.


அரசனிடம் தக்க படைவலிமை இருந்தால்தான் அவன் காவல் சிறப்புற அமையும்; படைஞர்களை அவன் ஊக்குவிக்க வேண்டும்.


குடிமக்கள் நலமாக இருந்தால்தான் அரசாட்சி நிலைக்க முடியும். அவர்களுக்கு அவன் காட்சிக்கு எளியவனாக இருந்து அவர்கள் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்க்க முற்பட வேண்டும்.


நாட்டுக்கு உணவு அடிப்படை, பொருள் உற்பத்திகளும் தேவை. இவற்றை உண்டாக்க அரசன் ஆக்கப் பணிகள் செய்ய வேண்டும். அவர்களிடம் வரிப்பணம் பெற்று அதனைத் தக்கபடி காத்துக் காத்தவற்றை அரச காரியங்களுக்குப் பங்கீடு செய்வது அவன் கடமை யாகும்.


5