இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கற்பியல்
அதிகாரம் 131
புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
1301
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
1302
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
1303
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
1304
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணா ரகத்து
1305
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
1306
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
1307
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி
1308
நீரும் நிழலது இனிதே புலவியும்
விழுநர் கண்ணே இனிது
1309
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவர்
1310
267
267