பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 9 : sឆ្នាខិយស 44. குற்றங்கடிதல் செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. 431 இவறலும் மாண்பிறந்த மானமும் மானா உவகையும் ஏதம் இறைக்கு. 432 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 433 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. 434 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துறு போலக் கெடும். 435 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. 436 செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். జీ3? பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. - 438 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. 439 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். 44%