பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 3. பாயிரம் 1. கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. t கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 2 மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். 3 வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். 6 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. 7 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. 8 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வனங்காத் தலை. g பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். +g