பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 22 அதிகாரம் 1: செய்ந்நன்றி அறிதல் 101 தான் எதுவுமே செய்யாதிருக்கவும் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுப்பினும் ஈடாக முடியாது. 102 உற்ற காலத்தில் செய்த உதவி சிறிதளவாக இருப்பினும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அதன் பெருமையோ உலகத்தைவிட மிகப் பெரியதாகும். 103. பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலையும்பிட அளவினால் மிகப் பெரியதாகும். 104. ஒருவன் தினையளவு நன்மை செய்தானாயினும் அதன் பயனை ஆராய்கின்றவர் அதனைப் பனையளவாக மதித்துப் போற்றுவர். 105.ஒருவர் செய்த உதவி அதன் அளவையே எல்லையாக உடையது அன்று. அது உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கும் ஏற்ற அளவை உடையாதாகும். 106. மன மாக இல்லாதவரின் நட்பினை ஒருபோதும் மறத்த லாகாது.துன்பம் உற்ற காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது. 107. தம்முடைய துன்பத்தைத் துடைத்தவரின் நட்பினை ஏழேழ்பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர் நன்றியுடையோர். 108. ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது. அவர் செய்த தீமையை செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும். 103. முன் நன்மை செய்த ஒருவர் கொன்றாற்பேன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர், முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அந்தத் துன்பம் மறைந்து போகும். 10. எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் தப்புவதற்கு வழி உண்டு.ஆயின் ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்யும் வழியே இல்லை.