பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 30 அதிகாரம் 15 பிறனில் விழையாமை 14. பிறலுக்கு உரியவளாகிய ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை உலகில் அறம் பொருள் இவற்றின் இயல்புகளை அறிந்தவரிடத்தில் இல்லை. 142 நல்ல அறநெறியை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவன் தலைவாயிலில் நிற்பவனைப்போல் அறிவிலிகள் இலர், 13. ஐயப்படாமல் தெளிந்து நம்பியல் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தாரை விட வேறு பட்டவர் அல்லர். 44. தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல் எவ்வளவு பெருமையுடையவராயினும் என்னவாக முடியும்? 145. இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்லுகின்றவன் எப்போதும் நீங்காது நிலைத்து நிற்கும் பழியை அடைவான். 148 பிறன் மனைவியை விரும்பி நெறிதவறி நடப்பவனிடத்தில் பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கு குற்றங்களும் நீங்காமல் நிலைத்து நிற்கும். 141. அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை வாழ்பவன் பிறனுக்கு உரிமையானவளை விரும்பாதவனாவான். 148 பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று நிரம்பிய ஒழுக்கமும் ஆகும். 49. அச்சந்தரும் கடல் சூழ்ந்த உலகில் நன்மைக்கு உரியவர் யார்? எனில் பிறனுக்கு உரிமையானவளின் தோளை நச்சித் தழுவாதவரே ஆவர். 50. ஒருவன் அறநெறியில் ஒழுகாமல் அறிமல்லாதவற்றையே செய்தாலும் பிறனுக்கு உரியவளை விரும்பவில்லை என்றால் அஃது அவனுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.