பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 70 அதிகாரம் 35 துறவு 341 ஒருவன் எந்த எந்தப் பொருளிலிருந்து பற்று விடுபட்ட வன் ஆகின்றானே அவன் அந்த அந்தப் பொருளால் துன்பம் அடைவதில்லை. 342. துன்பம் அற்ற வாழ்வை விரும்பினால் ஆசைகளை எல்லாம் விட்டுவிடல் வேண்டும் அப்படி விட்டு விட்டயின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பம் பலவாகும். 34. ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொரு எாசைகளையெல்லாம் ஒருசேர விட்டு விடுதல் வேண்டும். 34 ஒரு பொருளின்மீது ஆகையற்றிருத்தலே தவநெறியின் இயல்பாகும் ஆசையுள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்குவதற்கு வழியாகும். 345 பிறவித் துன்பத்தை ஒழிக்க முயல்பவர்கட்கு உடம்பு மிகையான பொருள். ஆகவே அதற்கு மற்ற ஆசைகளின் தொடர்பு கொள்வது எதற்காகவோ? 346 உடலை யான் எனவும் பொருள்களை எனது எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்தெறிகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் சேர்வான். 34. பொருள்களின் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவரையில், துன்பங்களும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும். 348 முற்றத்துறந்தவரே மேலான நிலையினர் ஆவர். மற்றை யோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர். 349, இருவகைப் பற்றுகளும் அறுந்து போன அப்பொழுதே, அந்நிலை, பிறவித்துன்பத்தை ஒழிக்கும். மேலும், உலக நிலையாமையும் அப்பொழுதே காணப்படும். 50. பற்றில்லாதவனான இறைவனது பற்றினை மட்டிலுமே விடாது பற்றுக, உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க. ; :