பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 71. துறவறம் 35. துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341 வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. 342 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடில்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. 344 மற்றும் தொடர்ப்பாடு என்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. 345 யான்னனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். 348 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. 347 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். 348 பற்றற்ற கண்ணே பிறப்புறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். 343 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. 350