பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பொருள் 48. வலியறிதல் வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். 471 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். 472 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். - 473 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 474 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின், 475 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். 476 ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. 477 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை 478 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். 479 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். 48O