பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பொருள் 56. கொடுங்கோன்மை கொலைமேற்கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. 551 வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. 552 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். 553 கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. 554 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை 555 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. 556 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. 557 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். 558 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். 559 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். 56O