பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பொருள் 68. வினைசெயல்வகை சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது, 671 தூங்குக தூங்கிச் செயற்பால் தூங்கற்க தூங்காது செய்யும் வினை. 672 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். 673 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் த்ெறும். 674 பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். - 675 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 676 செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். 677 வினையால் வினையாக்கிக் கோடல் நணைகவுள் யானையால் யானயாத் தற்று. 678 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஓட்டிக் கொளல். 679 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. 68O