பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பொருள் 77. படைமாட்சி உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாம் தலை. 761 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. 762 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். 763 அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை 764 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை 765 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. -- 766 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த - போர்தாங்கும் தன்மை யறிந்து. ,767 அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். 768 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை 769 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல், 77Ο