பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இன்பம் 114 நாணுத் துறவுரைத்தல் காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. 1131 நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. 1132 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்.இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். 1133 காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை. 1134 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். 1135 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். 1136 கடலன்ன காமம் உழ்ந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். 1137 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். 1138 அறிகிலார் எல்லாரும் என்றேளன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. 1139 யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. 1140