பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 இன்பம் 128. குறிப்பறிவுறுத்தல் கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்க லுறுவதொன்று உண்டு. 1271 கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. 1274 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கு மருந்தொன்று உடைத்து. 1275 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. 1276 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. - 1277 நெறுநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. 1278 தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய் தது. 1279 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. 128O