பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 இன்பம் 129. புணர்ச்சி விதும்பல் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. 1281 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். 1282 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண். 1283 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. 1284 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. 1285 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. 1286 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தேன் புலந்து. 1287 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. 1288 மலரினும் மெல்லிது காமம் சிலர்.அதன் செவ்வி தலைப்படு வார். 1289 கண்ணின் துணித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. 129O.