பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 இன்பம் 132. புலவி நுணுக்கம் பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. 1311 ஊடியிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. 1312 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினி என்று. 1313 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. 1314 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். 1315 உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கணள். - 1316 வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினி என்று. 1317 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. 1318 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. 1319 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினி என்று. 132O