பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 281 133. ஊடலில் உள்ள இன்பம் அவர்மேல் ஒரு தவறும் இல்லையாயினும் நாம் ஊடல் கொள்ளுதல் அவர் நம்மேல் மிக்க அருள் கொள்ளுமாறு செய்ய வல்லது. 1321 ஊடல் கொள்ளும்போது ஏற்படும் சிறு பிணக்கு, அவரது நல்லருள் சிறிது வாடும்படி செய்தாலும் பெருமையுற்றுச் சிறக்கும். 1 J 22 நிலத்தோடு நீர் இணைந்தாற் போன்ற பிணைப்புடைய காதலருடன் ஊடுவதை விடச் சிறந்த இன்பம் தேவர் உலகத்தில் உள்ளதோ? 1323 என் நெஞ்சை நெகிழச் செய்யும் அன்புப்படை, அவரைத் தழுவிப் பிரியாமல் இருக்கும்படி ஊடலின் போது தோன்றி விடுகிறது. 1324 தவறான எண்ணம் இல்லாதிருந்தும், தம்மை விரும்பும் தலைவியின் மெல்லிய தோளை ஊடலால் பெறாது அகன்றிருக்கிற அதிலும் ஓர் இன்பம் உண்டு. 1. 325 இப்போது உண்பதைவிட முன் உண்டது செரித்திருத்தல் உண்ணும் இன்பத்தை மிகுக்கும்; அது போல, புணர்வதை விட அதற்கு முன் ஊடல் கொள்ளுதல் காம இன்பத்தை மிகுக்கும். 1326 ஊடலில் தோல்வியடைந்தவரே பின் வெற்றி யடைந்தவர் ஆவர்; அவ் வெற்றியின் உண்மை பிறகு கூடலில் அறியப்படும். - 1327 நெற்றி வேர்க்கும்படிப் புணர்வதில் ஏற்படும் இந்த இன்பத்தை, இன்னும் ஒரு முறை முன்னால் ஊடிப் பின்னால் பெறுவோமோ? 1328 ஒள்ளணி பூண்ட காதலி ஊடிக் கொண்டேயிருப்பாளாக யாம் அவளைக் கெஞ்சும்படி இந்த இராக் காலம் விடியாது நீண்டு கொண்டே இருப்பதாக! 1329 ஊடுவது காமத்திற்குப் பேரின்பம் பின் தழுவிப் புணரப் பெற்றால் அப்பேரின்பத்திற்கு மிகப் பேரின்பமாகும். 1330