பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அறம் 20. பயனில சொல்லாமை பல்ல்ார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 191 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது, - 192 நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. 193 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. 194 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். 195 பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். 196 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. 197 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் ಫೆìಿ சொல். 198 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். 199 2OO