பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அறம் 28. கூடா ஒழுக்கம் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 271 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்.அறி குற்றப் படின். 272 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. • 274 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். 275 நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். 276 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 277 மனத்தது மாசாக மாண்டார்.நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். 278 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். 279 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். - 28O