பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அறம் 30. வாய்மை வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 291 பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். 292 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293 உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். 294 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. 295 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும். 296 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 297 புறந்துய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். 298 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. 299 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. 3OO