பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அறம் 31. வெகுளாமை செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அவ்விடத்துக் காக்கின்என் காவாக்கால் என். 3O1 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. 3O2 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். 3O3 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. 3O4 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 3O5 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புனையைச் சுடும். - 3OᏮ சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 3O7 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. 3O8 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். 3O9 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 31O