பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அறம் 38. ஊழ் ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. 371 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை - 372 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். 373 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. 374 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. 375 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. 376 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377 துறப்பார்மன் துப்பர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். 378 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். 379 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். 38O