பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பொருள் 42. கேள்வி செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. - 411 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413 கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். 416 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். 4.17 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. 4.18 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. 419 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். 42O