பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வேறு உயிர்களது உடலைச் சுவைப் பார், விடத்தைச் சுவைப்பார் என்று, புலாலை மறுக்கும் சூட்சமத்தை இந்த 6 வது குறளில் புரிய வைத்திருக்கிறார். 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். பொருள் விளக்கம்: பிறிதொன்றன் = பிறிதோருடம்பின் புண் அது = தசையான அது புல் ஆல் = ஊன் எனும் புன்மையான நஞ்சு என்று உணர்வால்பெறின் உள்ள நெகிழ்வுடன் பகுத்தறிந்த பிறகு, உண்ணாமெய் வேண்டும் = ஊன் உண்ணாத உடலாகக் காத்திட வேண்டும். சொல் விளக்கம்: புலா = புலவு, ஆல் = நஞ்சு, புண் = தசை உணர்வு = பகுத்தறிதல்; பாவித்தறிதல், அனுபவித்தறிதல், உள்ளம் நெகிழ்தல் முற்கால உரை: புலாலாவது பிறிதோருடம்பின் புண். அது தூய்தன்மை அறிவாரைப் பெறின். அதனை உண்ணாது ஒழியல் வேண்டும். தற்கால உரை: புலால் என்பது பிறிதோர் உடலின் புண்ணே என்பதை ஒருவர் உணர்ந்தாரே யானால், அவர் அப் புலாலை உண்ணாதிருத்தலைக் காத்திட வேண்டும். புதிய உரை: பிறிதோருடம்பின் தசையான அந்தத் தசைகள், ஊன் எனும் நஞ்சு என்று உணர்ந்தறிந்த பிறகு, அதை உண்ணாமல் தம் உடலைக் காத்திட வேண்டும். விளக்கம்: மற்ற உயிரின் உடலில் உள்ள தசைகளை, விரும்புகிறவர்கள் ஊன், மாமிசம் என்று, பெரிதாகப் பேசி மகிழ்கின்றார்கள். மாமிச உணவை வெறுப்பவர்கள், மிக எளிதாக, அதிலும் இழிவாக, பிறிதொன்றின் புண் என்று கேவலமாக எசி மகிழ்கின்றார்கள்.