பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 415 (՞Ջ எல்லாம், துறவிக்கு வேண்டியனவாக, அவர் விரும்பியனவாகக் கிடைக்கும் என்ற உண்மை நிலையை, மேன்மை வழியை, வள்ளுவர் 5 ஆம் குறளில் தெளிவாகக் காட்டுகிறார். 266. தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. பொருள் விளக்கம்: தவம் செய்வார் = புலன் வழி போகாமல், உள்ளம் ஒடுங்கி, மன ஒருமையுடன் தவம் செய்கிறவர். தம் கருமம் = தமது ஆன்மாவின் ஒருமைக்கான காரியங்களையே செய்வார் = மிகுதியாகச் செய்வார் மற்றல்லார் = மற்றைய தீயோர்கள் ஆசையுள்பட்டு = புலனாசைகளுக்கு வேகப்பட்டு அவம் செய்வார் = iணான கேடுகளையே செய்வார்கள். சொல் விளக்கம்: தம் - ஆன்மாக்கள்; கருமம் = தொழில், கடமை, செய்கை அல்லார் = தீயோர்கள்; அவம் = iண், கேடு, தீவினை. முற்கால உரை: தம் கருமம் செய்வாராவார் துறந்த தவத்தைச் செய்வார். அவரையொழிந்த பொருளின்பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலைஉட்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். தற்கால உரை: தவம் செய்பவர் என்று சொல்லப்படுபவர் தம் கடமையைச் செய்பவரே. அவரை அல்லாத மற்றவர், ஆசை எனும் பிடியுள் பட்டு, வீண் செயல் செய்பவரே. புதிய உரை: உள்ளம் ஒடுங்கி தவம் செய்பவர்கள், தங்கள் ஆன்மாக்கள் வலிமை பெற்றுய்யவே, கடமையாற்றுகின்றார்கள். தவவேடம் பூண்ட மற்ற தீயோர்கள், புலன் இன்பத்தில் சிக்கி, வீணான கேடுகளையே செய்து பட்டுப் போகின்றார்கள். விளக்கம்: தவம் செய்பவர்கள், தங்கள் ஆனந்தத்திற்காகவே அரிய கடமைகளை ஆற்றுகின்றார்கள். ஆன் நந்தம். என்பதே ஆனந்தம். அதாவது ஆன்மாவின் இன்பப் பெருக்கமே ஆனந்தம்.