பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4-16 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு பொருள் விளக்கம்: என் பான் - எனது தகுதி எள்ளாமெய் = பிறர் இகழாத நிலைமையை வேண்டுவான் = வேண்டி விரும்பிக் கேட்பவன் எனைத்தொன்றும் எவ்வளவுதான் ஒன்றிப் போனாலும் கள்ளாமெய் = பிறர் பொருளைக் கவராத உடம்பையும் தன்நெஞ்சு = ஆத்மாவுக்கு உட்பட்ட நெஞ்சையும் காக்க = காத்துக் கொள்ள வேண்டும். சொல் விளக்கம்: மெய் உடல், நிலைமை; எள்ளா இகழப்படாத வேண்டுவான் = வேண்டிக் கேட்பவன்; என் எனது பான் = தகுதி, சிறப்பு, நல்வினைப் பயன்; தன் - ஆத்மா நெஞ்சு - மனம். முற்கால உரை: வீட்டினை இகழாது விரும்புவான் இவனென்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. தற்கால உரை: பிறரால் இகழப் படாமையை விரும்புபவன் என்பவன், பிறருக்குரிய எந்த ஒரு பொருளையும் கவர்ந்து கொள்ளத் தன் மனம் விரும்பாதவாறு காத்தல் வேண்டும். புதிய உரை: .# --- .Ր T - - - + - ה) பற ப னனை இ Իլք {1}, {{, 6് ബി ആ 11 ഓ് 11 1ெனை டி க கொள்பவன், பிறருக்குரிய பொருளின் மீது எவ்வளவு தான் ஒன்றிப் போனாலும், அதைக் களவாடாத வாறு ல், மனம், ஆத்மாவைக் காத்துக் கொள்ள வேண்டும். விளக்கம்: புகழப்படுகின்ற வாழ்க்கை, இகழப்படுகின்ற வாழ்க்கை என வள்ளுவர் இரண்டாகப் பிரிக்கிறார்.