பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 179 அந்த அடிப்படையில்தான் ஆகாயத்து இடி போன்று ஆாவாரத்துடன் எழுகின்ற கோபத்தை, அடக்கி ஆளுகிறபோது, அவன் வீரனாகிறான். அவனது படைமடத்தின் பண்பாற்றல் அங்கே போற்றப்படுகிறது. வலிமையற்றவன் வீரமற்றவண் ஆகிறான். வீரம் புரிய அவனுக்கு உடலில் வலிமையும் இல்லை. மனதில் உாமும் இல்லை. அவன் கோபப்பட முடியாத ஒரு இழி நிலையை மறைப்பதற்காக, தான் கோபத்தை அடக்கிக் கொண்டேன் என்கிறான். அது பொய்யான சொல். போலியான கெளரவம். பங்கப்பட்ட வீரம். பழுதான வாழ்க்கை என்று வள்ளுவர் இங்கே பலமற்றவனை பரிகாசப்படுத்திப் பேசுகிறார். 302. செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற பொருள் விளக்கம்: செல்லா இடத்து - உன் வலிமைக்கு மிகுதியானவர் இடத்து சினம் = உனக்கு ஏற்படுகின்ற கோபமானது தீது = மரணத்தைக் கொடுக்கும் செல்லிடத்து (உம்மைவிட) வலிமை குறைந்தவர்கள் இடத்து, இல்லதனின் எந்தவித காரணமும் இல்லாமல் கோபப்படும்போது தீய பிற = தீயவைகளே ஏற்படும் சொல் விளக்கம்: இடத்து வலிமை மிக்காரிடத்து; தீது = மரணம் இல்லதன் காரணம்; இன் = ஏற்றுக்கொள்ளுதல் முற்கால உரை: ஒருவன் வெகுளிதன்னின் வலியார்மேல் இடின், தனக்கே தீதாம். மற்ற எளியார் மேல் இடினும் அதனின் தீயன பிற இல்லை. தற்கால உரை: தன்னால் யாதொன்றும் செய்ய முடியாத இடமாகிய வலியார்மேல் சினம் கொள் வதனால் ஒருவனுக்குத் திங் குதான் உண்டாகும். மெலியார்மேல் சினம் கொள்வது என்ப தை ப் பார்க்கினும் தீங்கு பயப்பது வேறொன்றும் இல்லை. புதிய உரை: தன்னைவிட வலியார் மீது ே i மரணமே நிகழ்கிறது. அதனிலும் தம்பைவிட வலிமை குறைந்த -* பத்தால் போது ) போது o = r - 2-y - -. - - வரிடம் மோதுகிற பொழுது, வேறுபல தீய விளைவு ஏதுவாகிறது.