பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை DO 356. கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி பொருள் விளக்கம்: கற்று = தொடர்ந்து கற்றுக் கொண்டதும் ஈண்டு - இப்பொழுதே என்று மெய்ப்பொருள் கண்டார் - உடலின் சிறப்பினை அறிந்து கொண்டவர்கள் மற்று = உடனே ஆண்டு - அப்பொழுதே வாராநெறி = ஒழுக்கத்துடன் வாழ்கிறசெயல்களை தலைப்படுவர் = ஏற்றுக்கொண்டு செயல்படுவர். சொல் விளக்கம்: கற்று = தொடர்ந்து பயிலுதல்; ஈண்டு - இப்பொழுதே தலைப்படுவர் - வாழ்பவர்; வாரா நெறி ஒழுகும் உபாயம் முற்கால உரை: இம் மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு, அதனால் மெய்ப் பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். தற்கால உரை: இவ்வுலகத்தில் கற்க வேண்டியவைகளை எல்லாம் கற்று, உண்மைப் பொருளை நன்கறிந்தவர்கள், மீண்டும் இல்லற நெறிக்கு வாரா வகையில் தூயதுறவர நெறியை அடைவார்கள். புதிய உரை: தினம் தினம் கல்வி பயில் வது போல, உடலின் உயர் ழுதே உடல்காக்கும் வழிகளைப் -_" தன்மையைக் கண்டறிந்து, அப்பொ பின்பற்றுவதை ஏற்று, ஒழுக்கத்துடன் செயல்படுபவர்கள் சிறந்த வாழ்வை வாழ்வர். விளக்கம்: 'கற்று' என்ற ஒரு சொல்லை வள்ளுவர் இந்தக் குறளில் பெய்திருக் கிறார். கற்பது இப்பொழுதே கற்பது என்பதற்காகக் 'கற்றுஈண்டு என்றார். இயற்கையைப் பற்றிக் கற்பது கற்க (க. பஞ்ச பூதங்கள், உடல், வியாதி, எமன்) ஒழுக்கத்தைக் கற்பது, கற்கை . ஆக, உடலைக் காக்கத்தான் கற்க வேண் டும் என்பதில், வள்ளுவர் உறுதியாக இருக்கிறார். தொடர்ந்து பயில்வதைத்தான் கல்வி என்றார். தினம் உடலுக்குப் பயிற்சி செய்கிறவன்