பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



             554 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா در ایران

பயில்வானாகிறான். தினம் மூளைக்குப் பயிற்சி செய்கிறவன் வித்வான் ஆகிறான். ஆன்மாவிற்குப் பயிற்சி செய்கிறவன் மகான் ஆகிறான். இந்த மூவகைப் பயிற்சிகளுமே உடலைக் காக்கின்ற உபாயங்களைத்தான் அளிக்கின்றன. அப்படிப்பட்ட ஒழுக்கமான வழிகளை, இப்பொழுதே செய்யுங்களென்று ஏழாவது குறளில் இயம்புகிறார்.

            357. ஒர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாய்
                 பேர்த்துள்ள வேண்டா பிறப்பு 

பொருள் விளக்கம்:

ஒர்த்து கூர்ந்து கேட்டு, ஆராய்ந்து, தெளிந்து உள்ளம் - ஆன்ம ரூப ஞானத்தின் முயற்சியால் உளளது - உணமையான உணரின் உடலின் மேன்மையை தெரிந்து கொண்டால் வேண்டா பிறப்பு: விரும்பாத தீமையயின் தொடக்கத்தையே பேர்த்து பெயர்த்து எறிந்து உள்ள உண்மையான வழியில் o ஒருதலையாய் = உறுதியாகக் காப்பாற்றி வாழ்வர்.

சொல் விளக்கம்:

ஒர்த்து = கூர்ந்து கேட்டு, ஆராய்துதெரிந்து உள்ளம் = ஆன்ம ரூப ஞானம் உள்ளது = உண்மையானது; ஒருதலை = நிச்சயம் பேர்த்தல் = பெயர்த்து; வேண்டா = வெறுப்பு

முற்கால உரை:

    அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவகையலானும், பொருந்து மாற்றானும் தெளிய ஆராய்ந்து, அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மறு பிறப்புளதாக நிகைக்க 

வேண்டா.

தற்கால உரை:

    ஒருவன் உள்ளமானது உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக அதனை உணருமாயின் பின்னர் வாழ்க்கையில் மாறிவரும் துன்பங்களைப்பற்றி அவன் எண்ண வேண்டியதில்லை. 

புதிய உரை:

    ஆராய்ந்து அறிந்தும், கூர்ந்து கேட்டும் உள்ளத்தில் மெய்யைப்

பற்றிய ஞானம் வந்ததும், அந்த உறுதியுடன், வெறுக்கின்ற தீமை எல்லாவற்றையும் வேரோடு பெயர்த்து எறிந்துவிட வேண்டும்.