பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. அகர முதல எழுத்தெல்லாம்

        அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
        பகவன் முதற்றே யுலகு

என்பது திருக்குறளில் முதற் குறள்.

தமிழ் எழுத்துக்கள் யாவும் அ' என்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பதுபோல, இவ்வுலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்பது இதன் பொருள்.

எழுத்துக்களை அறிபவர்கள் முதலில் அகரத்தை அறிவதுபோல, இவ்வுலகத்தை அறிபவர்கள் முதலில் இறைவனை அறியவேண்டும் என்பது இதன் கருத்து.

உயிரெழுத்து 12. மெய்யெழுத்து 18. உயிர்மெய்யெழுத்து 216. ஆய்த எழுத்து 1. ஆக எழுத்துக்கள் 247-க்கும், ‘அ’ எழுத்து தலைமை தாங்குவதுபோல, மண், நீர், காற்று, தீ, வெளி ஆகிய ஐம்பெரும் பொருள்களைக் கொண்ட இவ்வுலகுக்கு இறைவன் தலைமை தாங்குகிறான் என்பது இதன் மறைபொருள்!

“அகர முதல எழுத்தெல்லாம்” என்பது தமிழ் எழுத்துக்களை மட்டும் குறிப்பதல்ல. மலையாள எழுத்திலும் முதல் எழுத்து ‘அ’. கன்னடத்திலும் முதல் எழுத்து ‘அ’, தெலுங்கிலும் முதல் எழுத்து ‘அ’ , இலத்தீன், கிரீக், ஆங்கிலம், பிரஞ்சு முதலிய மேல் நாட்டு மொழிகளிலும் முதல் எழுத்து ‘அ’ உருதுவிலும் முதல் எழுத்து ‘அ’. சம்ஸ்கிருதத்திலும் முதல் எழுத்து ‘அ’ நேற்று முளைத்து நடமாட வந்திருக்கும் இந்தியிலும் முதல் எழுத்து ‘அ’. ஆகவே, “அகர முதல எழுத்தெல்லாம்” என்பதற்கு, ‘தமிழ் எழுத்தெல்லாம்’ என்று பொருள் கொள்ளாமல், எழுத்து என்று எழுதப் பெறுகிற எழுத்தெல்லாம் என்று பொருள் காண்பதே சிறப்பாகும்.

பல மொழிகளைக் கொண்ட எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அதுபோல் பல்வேறு உயிர்