பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25



அவ்விய நெஞ்சத்தான் என்பவன் பொறாமை, கொண்ட உள்ளத்தினன் மட்டும் அல்ல, கோணிய நெஞ்சத்தையும் உடையவன் என்பதும்; செவ்விய நெஞ்சத்தான் என்பவன் நேர்மையான உள்ளமுடை யவன் மட்டும் அல்ல, நிமிர்ந்த நெஞ்சையும் உடையவன் என்பதும் பெறப்படும். இதிலிருந்து, பொறாமை கொண் டவனுடையவும் கொள்ளாதவனுடையவும் நெஞ்சு உறுப்புக்களே அவர்களைக் காட்டிவிடுமென்பது வள்ளுவர் கருத்தெனத் தெரிகிறது.

அவ்விய செஞ்சத்தான் என்பவன் வளைந்த நெஞ்சினன், கோணல் நெஞ்சினன், அழுக்காற்றில் மூழ்குபவன். மனக்கோட்ட முள்ளவன், தீ நெறியில் நடப்பவன் என்றுமாவான்.

செவ்விய நெஞ்சத்தான் என்பவன் நிமிர்ந்த நெஞ்சினன், பரந்த மார்பினன், நல்லாற்றில் மூழ்குபவன். நேர்மையான உள்ளத்தினன், நல்வழி நடப்பவன் என்று மாவான்.

ஆக்கம் என்பது ஆகுதல், பெருகுதல், ஊக்கம், நிறைவு. மகிழ்ச்சி, எழுச்சி, செல்வம் எனப் பொருள் தரும். கேடு என்பது அழிவு, தேய்வு, சோர்வு, குறைவு, துன்பம், வீழ்ச்சி, வறுமை எனப் பொருள்படும்.

நினைக்கப்படும் என்பது, இருசீர் கொண்டு முடியும் ஒரு சொற்றொடர். இதன் பொருள் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று என்பது. இது இக்குறளிலிருந்து நினைத்துப் பார், ஆராய்ந்து உணர் எனக்கூறி, நம்மையெல்லாம் மேன்மேலும் சிந்திக்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றது.

என்பர், செய்வர், செய்யார், செயத்தக்க, கொள்ளற்க, வேண்டற்க, உண்டு, இல்லை, நன்று,