பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


அழுக்காறின் கொடுமையையும், அதன் விளைவையும் விளக்கவந்த இக்குறள். அதோடு சுற்றத்தாரின் பெருமையையும், அவர்களை இழப்பதால் உண்டாகும் விளைவையும் விரிந்த அளவில் விளக்குகின்ற சிறப்பு, வியப்பிற்குரிய ஒன்றாகும்.

எப்படி இக்குறள்? எத்தகையர் வள்ளுவர்? எடுங்கள் குறளை; படியுங்கள் நன்றாக. அந்த அளவோடு விட்டுவிடாதீர்கள். செயலிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.

        ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோர் சான்றோர்.
        ஈயாது வைத்திருக்கும் மக்கள் வறியவர்.
        ஈவதையும் தடுத்துக் கெடுவோர் கயவர்.
        இதனை அறிந்துகொண்டு வாழ்வதே நல்லது.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் குறள்நெறி!