பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


இன்மை, இல்லாமையையும்; இடும்பை, துன்பத்தையும் குறிப்பன. நிரப்பு நிறைவையும், குறைவையும் காட்டி நிற்கும் ஒரு சொல்; அது இக்குறளின் இறுதியில் நின்று துன்ப நிறைவையும், பொருட் குறைவையும் காட்டுவதோடு, வள்ளுவரது புலமையையும் காட்டி நிற்கிறது.

வறுமை வாய்ப்பட்டவன் அடையும் துன்பம் அளவு கடந்தது எனினும், வள்ளுவர் அதற்கொரு அளவு காட்ட முயன்றார்; முடியவில்லை. சம அளவு துன்பத்தை விளைவிக்கும் ஒன்றையாவது காட்டியாகவேண்டும் என எண்ணினார். வெற்றிபெற்று நமக்கும் காட்டிவிட்டார். அது எது தெரியுமா? "வறுமை விளைக்கின்ற அளவு து ன் ப த் தை விளைவிக்கக்கூடியது வறுமைதான்" என்பதே.

வறுமைத் துன்பத்திற்கு ஒரு உவமைத் துன்பத்தை காட்ட வள்ளுவர் தேடி அலைந்தார். சாவுத் துன்பம் எதிர்ப்பட்டது; அது துன்பமே அல்ல என ஒதுக்கி விட்டார். கொலைத் துன்பது குறுக்கிட்டது; இது ஒரு சிறு துன்பந்தானே, கொல்லப்பட்ட பிறகு அத்துன்பமுமிராதே எனத் தள்ளிவிட்டார். இறுதியாக, அவர் கண்ட உவமைத்துன்பம் எது தெரியுமா? கொல்லாமற் கொல்லும் கொடுமை; அக் கொடுமையை இக் குறளிலுள்ள "கொன்றது போலும்" என்ற உவமையிற் கண்டு மகிழுங்கள்.

நெருநல் என்பது நேற்று என்றாகும். "நேற்று வந்த துன்பம்" என்றே இதற்குப் பலரும் பொருள் கூறியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் படித்தேன். அது தவறு. குறளில் நெருநல் மட்டுமில்லை; "உம்" ஒன்றும் அதனுடன் சேர்ந்திருக்கிறது. அதற்கு 'நேற்றும்' என்று