பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


       “கையில் வானி தெரித்தபின் காய்ந்துதம்
        மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார்.”

என்ற வில்லி பாரதத்தினாலும்,

       "எய்தவன் பகழி யெல்லாம்
        பறித்தவன் என்மேல் எய்யும்'

என்ற கம்பராமாயணத்தினாலும் அறிய முடிகிறது. இதிலிருந்து தமிழ் மக்களின் பேராண்மையும் நன்கு விளங்குகிறது.

இவை அனைத்தும், “பழம் பெருமைகள்” என்று வெறுத்து ஒதுக்கிவிடக்கூடியதல்ல. பழம் பெருமைகளை எண்ணி நடப்பது புதிய வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்பதை நாம் நம்புவது நல்லது.

நாட்டின் செழிப்பையும், மொழியின் வளர்ச்சியையும், மக்களின் வீரத்தையும், மறைந்திருந்து தாக்கும் இன்றைய வஞ்சமக்களை ஒழிக்கவும், பகைவர்கள் என்ன செய்தாலும் உறங்கிக்கிடக்கும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவும், இதுபோன்ற பழந்தமிழ் வீரர்களின் வரலாறு நமக்குப் பெரிதும் துணை செய்யும்.

குறளை மற்றொரு முறை படியுங்கள் :

       "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
        மெய்வேல் பறியா நகும்."

வாழட்டும் குறள் நெறி!
வளரட்டும் தமிழர் வீரம்!!