பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. நோய் செய்தார் மேல!

       "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
        நோயின்மை வேண்டு பவர்."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது இன்னா செய்யாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று.

வெகுளாமையைப் பற்றிக் கூறிய பின்னும், கொல்லாமையை பற்றிக் கூறுவதன் முன்னும், "இன்னாசெய்யாமை” என்பதுபற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.

“நோய் எல்லாம் நோய் செய்தவர் மேல் ஆகும்; ஆதலின் நோயின்மை வேண்டுபவர் பிறர்க்கு நோய் செய்யார்” என்பது இதன் பொருள்.

திறக்குறள்களுக்கு உள்ள தனிச்சிறப்புகள் பல அவற்றுள் ஒன்று “மேற்போக்காகப் படிப்போர் அறிய முடியாத பல உயர்ந்த கருத்துக்களைச் சிந்திப்போருக்கு அது வழங்கிக்கொண்டிருக்கிறது” என்பதே!

இக் குறளில் ஆழ்ந்துள்ள பொருள்களைக் காணுமுன்னே, “நோய்” என்ற சொல்லுக்குப் பொருள் கண்டாக வேண்டும்.